சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியது.அதற்காக மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தீபிகா படுகோனே இன்று முற்பகலில் வந்தார்.பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியதுவிசாரணையில் பங்கேற்பதற்காக கோவாவிலிருந்து மும்பைக்கு தனி விமானத்தில் வந்தார் தீபிகா படுகோனே.இதே வழக்கில் தீபிகா படுகோனே மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி விசாரணை நடத்துகிறது.படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த தீபிகா படுகோனே விசாரணைக்காக மும்பை வந்துள்ளார்.கோவாவிலிருந்து கிளம்பும் முன்பு தீபிகா, சட்ட வல்லுநர்களுடன் இந்த வழக்கு பற்றி விவாதித்துள்ளதாக அறியப்படுகிறது.