ரயில் வழித்தடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் உள்ளூர் ரயில்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.மும்பையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.முக்கிய சந்தைகளிலும் மழை நீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது.கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.சந்தைகளில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் வருகையும் குறைந்துள்ளது.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மும்பை சந்திக்கும் வழக்கமான பிரச்னையாக வெள்ள பாதிப்பு மாறிவிட்டது.வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை.சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி.தண்டவாளமே தெரியாத அளவுக்கு நடைமேடைகளை தொட்டு நிற்கும் வெள்ளம்.