இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் சோனியா காந்தி.மலர் தூவி மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி, நவம்பர் 19, 1917 இல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு - கமலா நேருவுக்கு மகளாகப் பிறந்தார்.தில்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் பிறந்தநாளை கட்சியினரும் தொண்டர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். கேக் வெட்டிக் கொண்டாடும் பெண் தொண்டர்கள்.இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் இந்திரா காந்தி.1966 - 1977 , 1980- 1984 காலகட்டத்தில் பிரதமராக இருந்த அவர் 1984 அக்டோபர் 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.