சென்னை தீவுத் திடலில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த கலாசார விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவானது இன்று முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.