தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்குச் சென்றதால் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் தண்ணீரையே அனைவரும் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக நீரைப் பெறும் திட்டத்தைத் தொடங்கவுள்ளது.