மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஓடு தளத்தினுள் வெள்ள நீர் புகுந்து பாதையை மூழ்கடித்துள்ளது. இதை ஒட்டி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது.