உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் கங்கை, யமுனா, ககாராவில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகி, தில்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் தில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக யமுனை யமுனா நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.