நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.