புனித நீராடலின் போது பக்தர்கள், சாதுக்கள் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது உத்தரகாண்ட் மாநில அரசு.கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிட்டும் என பக்தர்கள் நம்பிக்கை.புனித நீராடும் பக்தர்கள்.கங்கைக் கரையில் புனித நீராடும் சாது.ஹரித்துவார் கங்கைக் கரை அருகில் பக்தி பரவசத்தில் வலம் வந்த சாது.அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.உடுக்கை ஏந்தி வரும் சாது.உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள்.திருவிழாவாவில் கலந்து கொண்ட பெண் பக்தர்.ஹரித்வாரில் வலம் வரும் பெண் பக்தர்.இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வர்.