கோர தாண்டவமாடி கரையை கடந்தது மாண்டஸ் புயல் - புகைப்படங்கள்
DIN
மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூரில் ஆா்ப்பரித்து காணப்பட்ட கடல் அலை.மாண்டஸ் புயலால், சென்னை சீனிவாசபுரத்தில் கரையோர குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கடல்நீா்.மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக சென்னை மெரீனாவில் எழுந்த ராட்சத கடல் அலைகளால் சேதமடைந்த அண்மையில் திறந்துவைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை.மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயலின் தாக்கம்சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்ந்து மழைநீர் தேங்கிய பாதை வழியாக மக்கள் நடந்து செல்கின்றனர்.எம்எம்டிஏ காலனியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.மாண்டஸ் புயலால் சென்னை எழும்பூர் பகுதியில் வேரோடு சாய்ந்த மரம்.மாண்டஸ் புயலால் சென்னை தி.நகரில் பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.மழைநீர் தேங்கியதால் கடல் போல காட்சியளிக்கும் மெரினா கடற்கரை.தொடர் மழை காரணமாக மெரினா கடற்கரையின் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழைநீர்.பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் குலம் போல மாறிய மெரினா கடற்கரை அணுகு சாலையில் மிதக்கும் கடைகள்.