தீவிர நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி முதல் கனமழை பெய்யத் தொடங்கும்.புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும்.நிவர் புயல் கரையை கடந்து 6 மணி நேரத்துக்குப் பிறகே வலுவிழக்கும் என்றும், அதுவரை புயலாகவே நீடிக்கும்.ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.நிவர் புயலானது முழுமையாகக் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆகும்.நிவர் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.