நேற்று முன்தினம் முதல் மும்பையில் பல இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.கனமழையால் மும்பையே வெள்ளக்காடானது.அனைத்து சாலைகள் ஆறுகளாக மாறி போனது.தற்காலிகமாக நிறுவப்பட்ட பம்பிங் இயந்திரங்களை இயக்கும் பணியாளர்கள், பம்பிங் நிலையங்கள், தீயணைப்புப் படை வீரர்கள் ஆகியோரை மாநகராட்சி எச்சரிக்கை நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.கனமழை காரணமாக அலைகள் எழும்பக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.பலத்த மழைக்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மும்பையில், நேற்று அதிகாலை முதலே பலத்த மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.