ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ரோஜா, டேலியா, சால்வியா, மேரிகோல்டு, அஸ்டர், பெண்டஸ், கேலக்ஸ், ஜெனியா, கோழிக்கொண்டை உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் மூலம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.