ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் நியூயார்க் நகரில் மெட் காலா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில் உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட நடிகர், நடிகைகள், விளம்பர மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் வண்ணமயமான இந்த நிகழ்வு பெரும் வரவேற்பு பெற்றது. இதில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஆடைகள் அணிந்து அசத்தும் பிரியங்கா தன் கணவரோடு கலந்துகொண்டு, வித்தியாசமான சிகை அலங்காரத்தோடு வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.