தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், அசோக் நகர், வளசர வாக்கம், ராமாபுரம், கே.கே. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, தரமணி, திருவான்மியூர், எழும்பூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.