73வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை, பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள ஏதுவாக, சுதந்திர தினத்தையொட்டி இந்த சிறப்பு நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட, பாரம்பரிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக இந்த சிறப்பு நீராவி ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.