படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்
DIN
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல், நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவர்.கெவாடியாவில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.புது தில்லியில் உள்ள படேல் சவுக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.புது தில்லியில் உள்ள படேல் சௌக்கில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மீனாட்சி மற்றும் தில்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் ஆகியோர்.படேல் சவுக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.புதுதில்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தெலுங்கானாவில் உள்ள பாலாநகரில், கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.படேல் சௌக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வைத்த மலர் பலகை.கெவாடியாவில் அணிவகுத்து செல்லும் காவல்துறையினர்.