பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தாமரை குளம், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி, சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றாக இணைந்து தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.