'முள்ளும் மலரும்', 'ஜானி', உதிரிப்பூக்கள் புகழ் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இயக்குநர் மகேந்திரனின் உடல் பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.