திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில், யானை முகமாக முதலில் வந்த சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.சிங்க முகமாக சூரபத்மன் வர, அவரையும் முருகபெருமான் போரிட்டு வதம் செய்தார்.சூரபத்மனை வதம் செய்து சேவலாகவும், கொடியாகவும் முருகப் பெருமான் ஆட்கொண்ட போது பக்தி பரவசத்துடன் 'முருகனுக்கு அரோகரா' என பக்தர்கள் முழக்கமிட்டனர்.சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற சூரசம்ஹாரம்.திருமுருகன்பூண்டியில் சூரனை வதம் செய்ய திருத்தேரில் அருள்பாலித்த சண்முகநாதர்.சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.பூத்தேரில் காஞ்சிபுரம் மேயர் மகன் ஒய்.சூர்யா முருகன் வேடமிட்டும் ராஜவீதிகளில் உலாவந்து ஆலயத்தின் முன்பாக அசுரர்களை அழிக்கும் நிகழ்ச்சி மரபுப்படி நடந்தது.