சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் 8ஆம் நாளன்று அறுபத்து மூவர் வீதியுலா கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள் புடை சூழ உற்சவர்கள் விநாயகர் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக கிழக்கு வலம் வந்தபோது பக்தர்கள் பரவசத்துடன் பக்தி கோஷம் எழுப்பினர்.