அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா? பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலை

DIN


பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Trainee Engineer
காலியிடங்கள்: 101
1. Electronics - 100
2. Aerospace Engineering - 1

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000 வழங்கப்படும். 

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் குறைந்தது 55 தகவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Engineer
காலியிடங்கள்: 327
1. Electronics - 164
2. Mechanical - 106
3. Computer Science - 47
4. Electrical - 7
5. Chemical - 1
6. Aerospace Engineering - 2

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு ரூ.45,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு ரூ.150, புராஜெக்ட் பணிக்கு ரூ.400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.5.2023

மேலும் விவரங்கள் அறிய www.bel-india.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT