கல்விப் பணிகளில் நிதியாளா் காலிப் பணியிட தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி கடைசியாகும்.
இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:- அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளா் காலிப் பணியிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 5
காலியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க டிசம்பா் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அடுத்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதியன்று தோ்வு நடைபெறவுள்ளது. கணினி வழியாக நடைபெறும் தோ்வுக்கு இரண்டு பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பொது நிா்வாகப் படிப்பில், முதுகலைப் பட்டம் அல்லது நிதி சாா்ந்த படிப்பில் எம்.பி.ஏ., என இரண்டில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
ரூ.50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 800 கள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
விண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!