ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஆர்ஐஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மென்பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Software Engineer
காலியிடங்கள்: 144
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், கம்பியூட்டர் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்பியல் டெக்னாலஜி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Data Analyst(ADA)
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்இ, எம்.டெக் தேர்ச்சி அல்லது கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது எம்சிஏ முடித்திருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cris.org.in என்ற இணையதத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022
மேலும் விவரங்கள் அறிய www.cris.org.in என்ற இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறை வங்கியில் எக்ஸிகியூட்டிவ் வேலை
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை: ஐபிபிஎஸ் அறிவிப்பால் சர்ச்சை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? எல்லை பாதுகாப்புப் படையில் பொறியாளர் வேலை
மத்திய ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?