விழுப்புரம் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் 1,234 கிராம சுகாதாரச் செவிலியர்கள் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு தமிழக அரசு மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வொய்ப், மல்ட்டி பார்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர் சான்றிதழ் பிடிப்பில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருந்தல் வேண்டும்.
இந்தப் பணிக்காக பதிவுதாரர்கள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
எனவே, இந்தப் பணிக்கான கல்வித் தகுதியைப் பெற்று, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள், தங்களது கல்வித்குதியை உறுதிப்படுத்துக்கொள்ள அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநரை வருகிற 24-ஆம் தேதி சந்திக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்
கப்பட்டுள்ளது.