அசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும் 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கான
அசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும் 


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: சமையலர் (ஆண்) 
காலியிடங்கள்: 13

பணி: சமையலர் (பெண்)
காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.15,700

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமானதாகவும், சுவையானதாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com