இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் 130-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவுத் திட்டத்தில் (டி.ஜி.சி.-130, ஜன 2020) சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும். இந்த பணி 18 நிலை வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அளிக்கக்கூடிய ஒரு பணியாகும்.
மொத்த காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 22 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.01.1993 மற்றும் 01.01.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராகவும், இரு தேதிகளிலும் பிறந்தவராக வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மேற்கண்ட பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஒராண்டு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tgc_130.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019