தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: இன்றே கடைசி

விழுப்புரம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள இரவுக் காவலர், மசால்சி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 10 ஆம் தேதி
தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: இன்றே கடைசி


விழுப்புரம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள இரவுக் காவலர், மசால்சி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 10 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: இரவுக் காவலர் - 29
பணி: மசால்சி - 11
பணி: பெருக்குபவர் - 07
பணி: துப்புரவுப் பணியாளர் - 01

தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து, தேர்வு குழுவானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதி முடிவு இவ்வலுவலக இணையதளம் மூலமாக தெரிவிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், விழுப்புரம்  605 602. விழுப்புரம் மாவட்டம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/PDJ%20Recruitment%20Advertisement%202019_0.pdf எனழ்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com