விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளை கடைசி

இந்திய விமான ஆணைய நிறுவனமான ஏ.ஏ.ஐ.- யின் கீழ் செயல்படும் துணை நிறுவனம், ‘கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி
விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளை கடைசி


இந்திய விமான ஆணைய நிறுவனமான ஏ.ஏ.ஐ.- யின் கீழ் செயல்படும் துணை நிறுவனம், ‘கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்’.  நிறுவனத்தின் சென்னை விமான தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 176 

பணி: செக்யூரிட்டி பெர்சனல் 

பணி: எக்ஸ்ரே ஸ்கிரீனர் 

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மற்றும் மண்டல மொழியறிவு பெற்றிருக்க வேண்டும். விமான போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அடிப்படை சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

உடற்தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: உடல் உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விமானதள பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.aaiclas.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aaiclas.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com