தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் நலவாரியம் மற்றும் நிதிக் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
பணி: Assistant Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: மாதம் ரூ.28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியில் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager - 02
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பாடத்தில் எம்பிஏ அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Office Assistant - 06
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 95,000
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nmdfc.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nmdfc.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2019