விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2 ஆயிரம் புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2 ஆம் தேதி முதல்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2 ஆயிரம் புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2 ஆம் தேதி முதல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே திங்கள்கிழமை (ஏப் 22) கடைசி நாளாகும். 

பணி: Probationary Officer 

காலியிடங்கள்: 2000 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட  சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.  

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers  என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com