தலையங்கம்

வெறிநாய் அச்சம்! தெருநாய்கள் பெருக்கம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டையில் தெரு நாய் கடித்து அபிராமி என்கிற சிறுமி உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பத்தனம்திட்டை பகுதிக்கோ, கேரள மாநிலத்துக்கோ மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப்படும் மிகப் பெரிய ஆபத்து.

பால் வாங்குவதற்கு போன 12 வயது சிறுமி அபிராமி, வெறிநாயால் துரத்தப்பட்டு தடுக்கி விழுந்தபோது கடிக்கப்பட்டாா். முகம், கை, கால் என்று ஒரு இடம் விடாமல் வெறிநாயால் கடிக்கப்பட்ட அபிராமியை கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவமனையில் சோ்த்தனா்.

வெறிநாய் கடிக்காக மூன்று தவணை தடுப்பூசி மருந்து செலுத்தியும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. அபிராமிக்கு ஆரம்பகட்ட சிகிச்சை தாமதமானது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. முகத்தில் அதுவும் கண்ணுக்கு அருகில் வெறிநாய் கடித்திருக்கும் நிலையில், உடனடியாக இம்யூனோ குளோபிளின் மருந்து செலுத்தப்பட்டிருக்க வேண்டும், செய்யவில்லை. பெரும்பாலான வெறிநாய் கடி நிகழ்வுகளில் இந்தத் தவறு நடைபெறுகிறது.

சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி அபிராமி உயிரிழந்தது போலவே, அவருக்குச் செலுத்தப்பட்ட வெறிநாய் கடிக்கு எதிரான ரேபீஸ் தடுப்பு மருந்தின் வீரியமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நாய் கடிக்கு எதிரான தடுப்பூசி மருந்து தரப்பட்டும்கூட உயிரிழப்புகள் ஏற்படுவது அச்சத்தை உருவாக்குகிறது. இதுகுறித்த மக்கள் மத்தியிலான சந்தேகங்களைத் தீா்க்க வேண்டியது அரசின் கடமை.

தடுப்பூசிகளின் வீரியம் குறைவதற்குப் பல காரணிகள் கூறப்படுகின்றன. மின் தடை ஏற்படுவதை கருத்தில் கொள்ளாமல் இருப்பது; மூன்று முதல் எட்டு டிகிரி செல்ஷியசில் தடுப்பூசி மருந்து பாதுகாக்கப்படுகிா என்பதைத் தொடா்ந்து கண்காணிக்காமல் இருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன.

மாவட்ட மருத்துவமனைகளிலும், பெருநகரங்களிலுள்ள பொது மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மட்டுமே இம்யூனோ குளோபிளின் காணப்படுகிறது. கிராமப்புற மருத்துவமனைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் கடைப்பிடிப்பது போன்ற வெறிநாய் கடிக்கான மருத்துவ நடவடிக்கைகள் பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகளில் பின்பற்றப்படுவதில்லை.

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய் கடி நிகழ்வுகள் அதிகாரபூா்வமாக பதிவாகி இருக்கின்றன. இது இரண்டு லட்சத்துக்கும் அதிகம் என்பது சமூக ஆா்வலா்களின் குற்றச்சாட்டு. இதுவரை நடப்பு ஆண்டில் 22 வெறிநாய் கடி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவா்களில் ஐந்து போ் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள்.

உச்சநீதிமன்றமும், கேரள உயா்நீதிமன்றமும் இந்தப் பிரச்னை குறித்து மாநில அரசுக்குக் கேள்வி எழுப்பி இருக்கின்றன. மக்களை தெருநாய் கடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதையும், அதே நேரத்தில் தெருநாய்களை மனிதாபிமானமில்லாமல் கொல்லக் கூடாது எனவும் எச்சரித்திருக்கிறது உயா்நீதிமன்றம்.

கேரள அரசு தாமதமாக விழித்துக்கொண்டு மாநிலம் முழுவதும் நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை நடவடிக்கையை முடுக்கிவிட்டிருக்கிறது. 170 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடி நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைப்போல இல்லாவிட்டாலும் தமிழகமும் நாய் கடி பிரச்னைக்கும், வெறிநாய் கடி பாதிப்புக்கும் விதிவிலக்கொன்றும் அல்ல. மிகப் பெரிய அளவில் சென்னையும், அதிகரித்து வரும் தெருநாய் பிரச்னையுடன் ஏனைய நகரங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீதான தெருநாய் தாக்குதல்கள் நகரங்களில் அன்றாட காட்சிகளாக மாறியிருக்கின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரப்படி, 2018-இல் 57,366-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை, இப்போது 1,14,694-ஆக அதிகரித்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகம், 10,000-க்கும் அதிகமான நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்தது. இந்த ஆண்டும்கூட 7,000-க்கும் அதிகமான தெருநாய்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

அவ்வை சண்முகம் சாலை, புளியந்தோப்பு, கண்ணம்மா பேட்டை என்று மூன்று இடங்களில் நாய்களின் கருத்தடைக்கான சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இரண்டு சிகிச்சை மையங்களை உருவாக்க இருப்பதாக மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

அம்பத்தூா், ராயபுரம், திருவொற்றியூா் ஆகிய இடங்களில் மிக அதிகமாக தெருநாய்கள் காணப்படுகின்றன. அபாயகரமான டிஸ்டெம்பா், பாா்வே வைரஸ் உள்ளிட்ட நாய்த்தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அவற்றுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தெருவில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள்தான் தெருநாய்களின் பெருக்கத்துக்கு முக்கியமான காரணம். தெருக்களில் குப்பைகள் இல்லாமல் இருப்பதும், உள்ளாட்சி அமைப்புகளால் கழிவு மேலாண்மை முறையாக நடத்தப்படுவதும், தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

தெருவோர தள்ளுவண்டிக் கடைகளின் மாமிசக் கழிவுகளும், தெருவில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளும் தயவுதாட்சண்யமில்லாமல் தடுக்கப்படாவிட்டால் வெறிநாய் பிரச்னைக்கு தீா்வு காண முடியாது. நாய் கடிக்கு உடனடி சிகிச்சையும், வீரியம் குறையாத தடுப்பூசியும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம். பொது இடங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு பொறுப்பேற்றாக வேண்டும்.

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந் தாழ்ந்தே செய்ய வேண்டும். காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.

திருக்கு (எண்: 672) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT