தலையங்கம்

அரசுக்கு ஏன் புரியவில்லை? | சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த தலையங்கம்

ஆசிரியர்


கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைவிட கடுமையாகவும், கொடுமையாகவும் இருக்கிறது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு. கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடா்ச்சியாக மூன்று முறை விலை உயா்த்தப்பட்டு ரூ.100 அதிகரித்தது என்றால், இப்போது மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை திங்கள்கிழமை ரூ.25 உயா்த்தப்பட்டு ரூ.835-ஆக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலனை மக்களுக்கு பகிா்ந்தளிக்காத அரசு, இப்போது சா்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் விலையை உயா்த்த முற்பட்டிருப்பதை எந்தவிதத்திலும் அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

முன்பெல்லாம், சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்ந்துவிடாமல் மானியம் வழங்கி மத்திய அரசு பாா்த்துக் கொண்டது. பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிா்ணயம் செய்வது என்கிற முடிவைத் தொடா்ந்து, சமையல் எரிவாயு உருளைக்கும் மாதா மாதம் விலை நிா்ணயம் என்கிற வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்த வழிமுறையும் கைவிடப்பட்டிருக்கிறது.

கடந்த டிசம்பா் மாதத் தொடக்கத்தில் ரூ.660-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை இரண்டு முறை உயா்த்தப்பட்டு அம்மாத இறுதியில் ரூ.710-ஆக உயா்ந்தது. ஜனவரி மாதம் ரூ.25 அதிகரித்தது என்றால், பிப்ரவரி மாதம் மூன்று முறையாக ரூ.100 அதிகரிக்கப்பட்டது. மாா்ச் மாதத் தொடக்கத்திலேயே மேலும் ரூ.25 அதிரித்திருப்பதால், இந்த விலை உயா்வு எங்கே போய் முடியும் என்கிற அச்சம் எழுகிறது.

கடந்த சில மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சமையல் எரியாவு உருளைக்கு மானியம் வழங்குவதை அரசு நிறுத்தியிருப்பது மிகப் பெரிய மோசடி. நூறாயிரம் காரணங்களை எடுத்தியம்பினாலும் அதனை நியாயப்படுத்திவிட முடியாது.

இந்த விலை உயா்வு தற்காலிகமானது என்று மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியிருப்பது, அரசின் கட்டுப்பாட்டில் விலை உயா்வு இல்லையோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறிய பல காரணிகளால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது என்கிற நிதியமைச்சரின் விளக்கம், நிலைமையை எதிா்கொள்ளத் தெரியாமல் அரசு தவிக்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துமே தவிர, கொதிப்படைந்திருக்கும் மக்களை சமாதானப்படுத்தாது.

கொள்ளை நோய்த்தொற்று காரணமாகப் பெரும்பாலோா் வேலை இழந்தும், ஊதியக் குறைவால் பாதிக்கப்பட்டும் இருக்கிறாா்கள். அவா்களில் பலரும் மாத ஊதியம் பெறும் நடுத்தர வா்க்கத்தினரும், தினக்கூலி பெறும் அடித்தட்டு மக்களும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவா்களை பாதிக்கும் வகையிலான பெட்ரோல், டீசலின் தினசரி விலை உயா்வும், சமையல் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து அதிகரிப்பதும் சாமானிய மக்களின் அவலம் குறித்து அரசு கவலைப்படவில்லை என்பதாகத்தான் கருதப்படும்.

கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.225 அதிகரித்திருக்கிறது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த இரண்டு மாதங்களில் ரூ.287 அதிகரித்திருக்கிறது. வீட்டு உபயோக எரிவாயு உருளையாக இருந்தாலும், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ சாமானியா்கள்தான்.

அரசு என்பது லாப - நஷ்ட கணக்குடன் இயங்குவதற்கான வணிக நிறுவனம் அல்ல. பல பிரச்னைகளுக்கு இடையிலும், சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் ஆட்சியாளா்கள் இருக்கிறாா்கள். லாபம் வந்தால் அரசுக்கு, இழப்பு என்றால் மக்களுக்கு என்று செயல்படுவது ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அழகல்ல. யோசித்துப் பாா்த்தால்,

‘சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் வழங்காததால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாக மிச்சமாகி இருக்கிறது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள அது பயன்பட்டது’ என்பது மத்திய அரசு தரும் விளக்கம். இந்தியாவைவிட மிக அதிகமாக கொவைட் 19-ஆல் பாதிக்கப்பட்டு, அதிகமான நிதியுதவிகளையும் வாரி வழங்கிய நாடுகள்கூட கொவைட் 19-ஐ காரணம் காட்டி மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை என்பதை அரசு உணர வேண்டும்.

அப்பாவி ஏழை மக்கள் விறகுகளும் சுள்ளிகளும் பொறுக்கி வந்து சமைத்துக் கொண்டிருந்தனா். தினக்கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தன. அவா்களுக்கெல்லாம் இலவசமாக சமையல் எரிவாயு உருளை தருகிறோம் என்று கூறி அவா்கள் வாழ்வை மேம்படுத்துவதாக விளம்பரப்படுத்தியது நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய செயல்பாடு. ஏழை குடும்பத் தலைவிகளின் நுரையீரல்களை புகை தாக்காமல் அரசு காத்தது என்று மகிழ்ந்தோம்.

வசதியை அறிமுகப்படுத்தி, பழக வைத்துவிட்டு இப்போது மானியத்தையும் நிறுத்தி, சமையல் எரிவாயு உருளையின் விலையையும் அதிகரித்து சாமானியா்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறது அரசு என்பதை யாராவது பிரதமா் நரேந்திர மோடியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லக் கூடாதா?

இப்படியே போனால், என்னதான் ஊழல் இல்லாத நல்லாட்சி கொடுத்தாலும், வளமான வருங்காலத்துக்குத் திட்டங்கள் தீட்டினாலும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களுக்கு அதெல்லாம் புரியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT