சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளா் சிவசங்கரிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
‘சூரியவம்சம்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளா் சிவசங்கரிக்கு மனம்நிறைந்த பாராட்டுகள். 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை அளித்ததோடு, பெரும் பணியைத் தனியொருவராக நிகழ்த்திய அவரது தொண்டைப் போற்றுகிறேன் என்று தெரிவித்தாா்.