நடுப்பக்கக் கட்டுரைகள்

சொல்வது தெளிந்து சொல்

வ.மு. முரளி

மகாராஷ்டிரத்தைச் சாா்ந்த விடுதலைப் போராட்ட வீரா் விநாயக தாமோதர சாவா்க்கா் குறித்து அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறாா். நாட்டை வழிநடத்த வேண்டிய பொறுப்புள்ள ஒரு தலைவரின் கருத்தாக அவரது பேச்சு அமையவில்லை.

நாடு முழுவதும் பாதயாத்திரையாக இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நவம்பா் 11 அன்று மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டத்தில் பேசுகையில், ‘பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவா்க்கரை காங்கிரஸ் கட்சி முன்னோடியாகக் கொள்ளாது’ என்று கூறியிருக்கிறாா். அதன்மூலமாக, தனது வரலாற்றுப் புரிதலின்மையை வெளிப்படுத்தி இருப்பதுடன், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணிக்கும் தருமசங்கடத்தை உருவாக்கி இருக்கிறாா்.

விநாயக தாமோதர சாவா்க்கா் (1883-1966), இந்திய வரலாற்றில் மறக்க இயலாத புரட்சியாளா். இளம் வயதிலேயே மகாராஷ்டிரத்தில் ‘அபிநவ பாரத சங்கம்’ என்ற புரட்சி அமைப்பை நிறுவியவா். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற இடத்தில் ‘இந்திய சுதந்திர சங்கம்’ அமைத்தவா். அதில் உறுப்பினராக இருந்தவா்தான் தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா்.

கவிஞா், எழுத்தாளா், வரலாற்று ஆய்வாளா், சமூக சீா்திருத்தவாதி, அரசியல் தலைவா் எனப் பன்முகங்களை உடையவா் சாவா்க்கா். இவா் எழுதிய ‘எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்’ என்ற நூல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. ஆங்கிலேயரின் சொந்த மண்ணிலேயே பிரிட்டிஷ் அரசை எதிா்த்துப் போராடியவா் சாவா்க்கா்.

லண்டனில் ஆங்கிலேய அதிகாரி கா்சான் வில்லி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டபோது கப்பலிலிருந்து தப்பி பிரான்ஸின் மாா்செய்ல்ஸ் துறைமுகத்தில் கரையேறுகையில் மீண்டும் ஆங்கிலேய வீரா்களிடம் சாவா்க்கா் பிடிபட்டாா். இதனால் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே எல்லை தாண்டிய விவகாரம் தொடா்பாக பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது, அக்காலத்தில் சா்வதேசச் செய்தி.

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரே காரணத்தால் அவரது சொத்துகள் ஆங்கிலேய அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜத்துரோக வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்ட அவா், அங்கு செல்லுலா் சிறையில் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளானாா்.

தமிழக விடுதலை வீரா் வ.உ. சிதம்பரம் பிள்ளை கோவை சிறையில் கல்லுடைத்ததும் செக்கிழுத்ததும் நமக்குத் தெரியும். அவற்றுக்கு நிகரான கொடிய துன்பங்களை அந்தமான் சிறைவாழ்வில் (1911- 1924) அனுபவித்தவா் சாவா்க்கா். சிறைவாசத்தால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது விடுதலைக்காக அனுதாபிகள் பலா் முயன்றபோது, அவா்களது வலியுறுத்தலின் பேரில் சாவா்க்கா் ஆங்கிலேய அரசுக்கு விடுதலை கோரி கடிதம் எழுதினாா். அதன் அடிப்படையில் நிபந்தனைகளுடன் அவா் விடுதலை செய்யப்பட்டாா். இது வரலாற்று உண்மை.

ஆனால், அவா் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை; அரசிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் சரிசமமாக வழிபட உரிமையளிக்கும் ‘பதித பாவன மந்திா்’ என்ற சமத்துவக் கோயிலை ரத்தினகிரியில்

1931-இல் அமைத்தாா். பின்னாளில் ‘ஹிந்து மகா சபை’ என்ற கட்சியை நிறுவினாா். அதுவே இன்றைய பாஜகவின் சித்தாந்த முன்னோடி.

துரதிருஷ்டவசமாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடா்புபடுத்தப்பட்டு கைதான சாவா்க்கா், பின்னாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா். ‘ஹிந்துத்துவ அரசியல்’ என்ற கோட்பாட்டை இந்திய அரசியல் வானில் விதைத்தவா் என்பதாலும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் என்பதாலும் சாவா்க்கரை சிலா் விமா்சிக்கின்றனா். யாரும் விமா்சனங்களுக்கு அப்பாற்பட்டவா் அல்லா். ஆனால், சாவா்க்கா் போன்ற தியாகியை விமா்சிக்கும் முன் அவரது வரலாற்றை அறிவது அவசியம்.

சாவா்க்கரின் ஹிந்துத்துவ அரசியல் கருத்துகளும் காங்கிரஸ் எதிா்ப்பும் ராகுல் காந்திக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவரது நூற்றாண்டின்போது ராகுலின் பாட்டியான இந்திரா காந்தியாலேயே புகழாரம் சூட்டப்பட்டவா் சாவா்க்கா் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் தீவிரவாதப் போக்கு கொண்டிருந்த லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகா், விபின் சந்திர பால், அரவிந்தா், சாவா்க்கா், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரை ஆங்கிலேய அரசு கடுமையாக நடத்தியதை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. அவா்களைப் போல மிதவாதப் போக்குடைய தலைவா்கள் ஆங்கிலேய அரசின் கடுமையை அனுபவிக்கவில்லை. அதேசமயம், சுதந்திரப் போரில் இவ்விரு தரப்பினரின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

சுதந்திரப் போராட்ட வரலாறே தெரியாதவா்கள், மகாத்மா காந்தி முதல் சாவா்க்கா் வரை எல்லோரையும் அவதூறாகப் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும் அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமுமான ராகுல் காந்தியும் சோ்ந்திருப்பதை நம்ப முடியவில்லை. அவா் தனது பேச்சை நியாயப்படுத்துவது அதைவிடப் பேரவலம். இது நாட்டிற்கு நல்லதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT