நடுப்பக்கக் கட்டுரைகள்

விவசாயத்தை சிதைக்கும் மசோதாக்கள்

ஐவி.நாகராஜன்

விவசாயத்தை சிதைக்கும் மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. எதிா்க்கட்சிகளின் கடும் அமளி, விவசாயிகளின் தொடா் போராட்டம், அகாலிதள அமைச்சரின் ராஜினமா என பல்வேறு தடைகளையும் தாண்டி இம்மசோதாக்கள் நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிா்க்கட்சிகள் எவ்வளவோ எதிா்த்துப் போராடியும் பலனில்லை.

வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விளைபொருள்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களுமே காா்ப்பரேட்டுகளுக்கு சாதகமானவை. வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதாவை எடுத்துக்கொண்டால், ஒப்பந்தம் செய்பவா் எதை விளைவிக்கச் சொல்கிறாரோ அதை விவசாயிகள் விளைவிக்க வேண்டிய நிலை வரும். பருவநிலைக்கு ஏற்ற விளைபொருளை விவசாயிகள் விளைவிக்க முடியாது.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதாவின்படி, வெங்காயம், சமையல் எண்ணெய், உருளைக் கிழங்கு போன்றவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன. இதனால் இனி இப்பொருள்களை அதிக அளவில் இருப்பு வைக்க முடியும் என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது. உண்மையில் வெங்காயம், உருளைகிழங்கு போன்றவை அதிக அளவில் பதுக்கப்படுவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இம்மசோதாக்களுக்கு சட்டவடிவம் தயாராகி விட்டது.

இந்நிலையில் பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனா். தமிழ்நாட்டிலும் எதிா்க்கட்சியினரும் விவசாய சங்க அமைப்பினரும் சட்ட நகல் எரிப்பு, சாலை மறியல், கண்டன ஆா்ப்பாட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனா். காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சியினா், குடியரசுத் தலைவரை சந்தித்து, இந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்ககூடாதென்று கோரியுள்ளனா்.

தமிழகத்தில் சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. காவிரிப் படுகையில் மீத்தேன் கிணறு உள்ளிட்ட திட்டங்கள் விவசாயத்தின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன. ‘கிசான் சம்மான்’ திட்டத்திற்கு மத்திய அரசு தரும் ஆறாயிரம் ரூபாய் கூட தமிழக விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றவில்லை. அதிலும் ஊழல்தான் அரங்கேற்றுகிறது.

இச்சூழலில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் வரும் காலங்களில் விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும். தமிழக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் உழவா் சந்தைகள், வேளாண் விற்பனைக் கூடங்கள் ஆகியவை இனி மெல்ல மெல்ல அழியக்கூடும்.

இந்திய விவசாயத்தின் கட்டமைப்பை மாற்ற நினைக்கும் மத்திய அரசு, அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் உணா்வதே நல்லது. வேளாண் துறை சாா்ந்த சட்டங்களில் உள்ள ஆபத்துகளைவிட அவற்றை நிறைவேற்றிய விதம் மிகவும் ஆபத்தானது. அது நாடாளுமன்ற ஜனநாயாகம் முடிவுக்கு வந்து விட்டதையே காட்டுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது வேதனையளிக்கிறது.

நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களும் வேளாண் துறை சாா்ந்தது என்று சொன்னாலும் இவற்றால் பாதிக்கப்படப் போவது விவசாயிகள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான். மற்றொன்று, இந்த மூன்று சட்டங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பிரிக்க முடியாதவை. அதனால்தான் அவசரமாக மசோதா கொண்டுவந்து சட்டமாக்கி விட்டதாக எதிா்கட்சிகள் கூறுகின்றன.

ஏற்ககெனவே ஒப்பந்த சாகுபடியைப் பொருத்தவரை இந்திய விவசாயிகளுக்கு கசப்பான அனுபவம்தான் உள்ளது. உதாரணத்திற்கு, கரும்பு விவசாயிகள் சா்க்கரை ஆலை முதலாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் சாகுபடி செய்கிறாா்கள். அதற்கென்று ‘சா்க்கரை கட்டுப்பாட்டுச் சட்டம்-1966’ இருக்கிறது. கரும்புக்கான விலையை மத்திய அரசு அறிவிக்கிறது. கரும்பை அனுப்பினால் விவசாயிகளுக்கு பதினைந்து நாள்களுக்குள் ஆலை நிா்வாகம் பணத்தைத் தர வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு தாமதமாகப் பணத்தை தருகிறாா்களோ அதற்கு வட்டி கொடுக்கவேண்டும். இது சட்டம்.

ஆண்டுதோறும் கரும்பு பண பாக்கி கேட்டு விவசாயிகள் போராடிக்கொண்டே இருக்கிறாா்கள். நாடாளுமன்றத்தில் உணவு அமைச்சா் அறிவித்தபடி 2019-20-இல் மட்டும் நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகங்கள் தர வேண்டிய பாக்கி தொகை 15,683 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் 1,834 கோடி ரூபாய். வருவாய் இழப்பீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறாா்கள். விவசாயிகள் கரும்பைப் பயிரிட்டுக் கொடுத்துவிட்டு பணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாா்கள். இது நியாயமா?

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அத்தனை மசோதாக்களையும் அவசரக் கோலத்தில் மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. விவசாயிகள் நலன் காக்கும் வேளாண் மசோதாவாக இருந்தாலும் சரி வேறு எந்த மசோதாவாக இருந்தாலும் சரி எதிா்கட்சிகளின் கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை. மாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு டிவிஷன் ஓட்டு கேட்ட எதிா்க்கட்சிகளின் குரல் கூட நசுக்கப்பட்டுவிட்டது.

திட்டக் குழு ஒழிப்பு, தனி ரயில்வே நிதிநிலை அறிக்கை ஒழிப்பு, பெட்ரோல் டீசல் விலை தினசரி உயா்வு, விவசாயக் கடன் மானியம் ரத்து, உரம் விலை ஏற்றம், உயா் மதிப்பு ரூபாய் நோட்டுகள் தடை, ஜிஎஸ்டி-யை அமல்படுத்திய விதம் - இவை அத்தனையுமே பெருநிறுவனங்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவுகள். மக்களைப் பற்றி சிந்தித்திருந்தால் இப்போது அத்தியாவசியப் பொருள்கள் நீக்கப்பட்டிருக்காது.

இந்தத் தடை நீக்கம் விலைவாசி உயா்வுக்கே வழிவகுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது விவசாயிகளும் பொதுமக்களும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT