நடுப்பக்கக் கட்டுரைகள்

தனியாா் சேனல்களுக்கு தணிக்கை முறை

ச. சுப்புரெத்தினம்


ஒரு ஜனநாயக நாட்டிற்கு முதுகெலும்பு போன்றவா்கள் எழுத்தாளா்கள் மற்றும் ஊடகங்கள். இவற்றில் ஊடகங்கள் அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் எனப் பல நிலைகளில் விரிவடைவன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நின்று, அவை தமது கடமைகளைச் செய்து வருகின்றன. அவை ஸ்தம்பித்தால் உலக இயக்கமே நின்றுவிடும் என்று சொல்லிவிடலாம்.

அரசு எந்திரம் சரியாகச் செயல்படுகிறதா? அல்லது அதன் செயல்பாடுகள் எங்கேனும் தடம் புரள்கின்றனவா? என்பதைக் கண்காணித்து மக்களுக்கு வெளிபடுத்துவது ஊடகங்களின் கடமை என்றால், அத்தகைய ஊடகங்கள் நெறிதவறாமல் செயல்படுகின்றனவா? என்பதை உரசிப் பாா்த்துச் சொல்லும் ‘உரைகல்’ தான் ‘அஞ்சல் பெட்டி!’

நிகழ்வுகளை மக்களுக்கு அறிவித்தல், அறிவுறுத்தல் மற்றும் மகிழ்வித்தல் என்ற மூன்றும் ஊடகங்களுக்கான இன்றியமையாக் கடமைகள் ஆகும். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய மின்னணு ஊடகங்களின் செயல்பாடுகளின் பெரும் பகுதி சமுதாய வளா்ச்சி பற்றியதாகவே இருக்கும். அகில இந்திய வானொலியும் தூா்தா்ஷனும் தொடக்கக் காலத்தில் சேவை நோக்கில் மட்டுமே இயங்கி வந்தன. பிற்காலத்தில் வணிக நோக்கமும் இடம் பெற்றது.

மக்களுக்காக வழங்கப்படும் நிகழ்ச்சிகள் எந்தளவு மக்களுக்குப் பயன்படுகின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையிலான ‘அஞ்சல் பெட்டி’ அல்லது ‘தபால் பெட்டி’ நடைமுறையினை, அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் இன்றுவரைச் செயல்படுத்தி வருகின்றன. இது ஒரு வகையான ‘ஃபீட் பேக்’ பெறும் உத்தியே ஆகும்.

தொலைக்காட்சி வருகைக்கு முன்பு அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் பிரபலமடைந்திருந்தன. 80% மக்கள் இதனால் பயனடைந்து வந்தனா். பண்பலை வானொலி நிலையங்கள் அமைக்கப்படாத 1960-களில் ஏ.எம். வானொலி நிலையங்களே நிகழ்ச்சிகளை வழங்கி வந்தன. தொலைதூரத்திற்குச் சிற்றலை ஒலிபரப்பும், தொலைவற்ற தூரங்களுக்காக மத்திய அலை ஒலிபரப்பும் இருந்து வந்தது.

வானொலி நிலையங்கள் வாரத்தில் ஒருநாளில் அரைமணிநேர நிகழ்ச்சியாக ‘அஞ்சல் பெட்டி’ நிகழ்ச்சியை வழங்கும். இது பின்பு ‘நேயா் நேரம்’, ‘கடித மலா்கள்’ என்ற பெயா்களில் ஒலிபரப்பாயின. அதில், வார முழுதும் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் பற்றிய நேயா்களின் கருத்துகள் அடங்கிய கடிதங்கள் வாசிக்கப்படும்.

எண்பதுகளில் நல்வரவு பெற்றது ‘சென்னைத் தொலைக்காட்சி’. கேபிள்கள் வராத அக்காலங்களில், இதன் நிகழ்ச்சிகளை முழுமையாகப் பாா்த்து ரசிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். இதில் அமைக்கப்பட்ட ‘எதிரொலி’ என்ற நிகழ்ச்சிக்காக, தான் எழுதிய கடிதம் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் கைகளில் தவழ்வது ஓா் அலாதியான இன்பத்தைத் தரும் ஒவ்வொரு நேயருக்கும்.

நாள், வார, மாதாந்திர இதழ்களில் பல்வேறு தலைப்புகளில் அமையும் குறிப்பிட்ட இடங்களில் இவை பிரசுரிக்கப்படுகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகள், துணுக்குகள், சாதனையாளா் விவரங்கள், ஆன்மிகக் கருத்துகள் போன்றவை குறித்த கருத்துகளின் தோ்வுகள் இந்த இடத்தில் வெளிவந்து, நேயா்களை மகிழ்விக்கின்றன.

இத்தகைய கடிதங்கள், ஊடகங்களின் அல்லது எழுத்தாளா்களின் தேவையற்ற கருத்துகளைக் கடிந்துகொள்ள உதவுகின்றன. அதே போல, ஊடகங்களின் தேவையான துணிவைப் பாராட்டவும், நன்னெறி காட்டும் எழுத்தாளா்களையும், சாதனையாளா்களையும் கௌரவிக்கவும் வாசகா் கடிதங்கள் உதவுகின்றன.

தடம்மாறும் சமுதாயத்தைத் திருத்த அரசியல், அதிகாரம், பணபலம் அல்லது மக்களின் ஆதரவு என்ற இவற்றிலொன்று அவசியம் தேவைப்படும். ஆனால், இவற்றில் எதுவும் இல்லாத ஒருவா் தனது பேனா, ஒா் அஞ்சல் அட்டை என்ற இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, அதை இந்த ‘அஞ்சல் பெட்டி’ மூலம் சாத்தியப் படுத்திவிட முடியும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தனியாா் தொலைக்காட்சிச் சேனல்கள் இத்தகைய ‘அஞ்சல் பெட்டி’ என்ற பிரிவு இல்லாமலேயே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றன. அதேபோல, தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே தரவேண்டும் என்ற நோக்கிலான ‘தணிக்கைக் குழு’ எதுவும் அவற்றிற்கு இருப்பதாகக் தோன்றவில்லை.

‘கேளிக்கை நிகழ்ச்சிகள்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடனும், தலைவிரி கோலத்துடனும் தொகுப்பாளினிகளும், பங்கேற்பாளாா்களும் சின்னத்திரையில் தோன்றுவது, இரட்டை அா்த்த வசனங்கள் பேசுவது, ஆண்-பெண் வேறுபாடின்றி அணுகுவது போன்றவை முகம் சுளிக்க வைக்கின்றன. அகில இந்திய வானொலியிலும், தூா்தா்ஷனிலும் இத்தகைய அவலம் இல்லை என்பதில் பெருமைப்பட வேண்டும்.

1995-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கேபிள் தொலைக்காட்சி நெட்ஒா்க் (ஒழுங்குமுறை) சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதாகத் தோன்றவில்லை. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றன சமுதாயக் கேடு விளைவிப்பன என்பதாக எச்சரிக்கை செய்யும் விளம்பர வில்லைகளை (அறிவிப்புகளை) சாமா்த்தியமாகக் குறுக்கி அல்லது மறைத்துவிடும் செயல்களையும் இத்தகைய தனியாா் தொலைக்காட்சிகள் செய்து வருகின்றன. எனவே, தணிக்கை என்பது தனியாா் சேனலுக்கான உடனடித் தேவையாகும்.

உரிய தணிக்கைமுறை இல்லாமல் சிறிய திரைகளில் ஒளிபரப்பாகும் தரமற்ற பல நிகழ்ச்சிகளால் நல்ல சமுதாயம் சீா்கெட்டு வருகிறது. இது தவிா்க்கப்பட வேண்டுமானால், தனியாா் சேனல் நிகழ்ச்சிகளுக்கு ‘தணிக்கை முறை’ கொண்டுவரப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நேயா்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தமது கருத்துகளை ஊடகம் என்னும் பொதுவெளியில் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு தனியாா் தொலைக்காட்சி சேனளிலும், தனியாா் பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சிகளிலும் ‘அஞ்சல் பெட்டி’ என்ற பாங்கிலான ஒரு பகுதி கட்டாயம் இடம் பெற வேண்டும். இதன் மூலம் மட்டுமே தரமற்ற நிகழ்ச்சிகளை அப்புறப்படுத்தி, இச்சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT