மலையாளத்தில் ஜல்லிக்கட்டு,அங்கமாலி டையரிஸ், சுருளி ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: ‘பகாசூரன்’ இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
தற்போது மோகன்லால் கமல்ஹாசனுடன் இணைந்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தினை இயக்கிவருகிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். தீபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன் இந்தப் படத்துக்கு காஷ்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.
இதையும் படிக்க: ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்கள்?
ஏற்கனவே இந்தப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக இருக்கும் நிலையில் நடிகர் ஜீவாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் மோகன்லாலுடன் நடிகர் கமல், ஜீவாவும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது ராஜஸ்தான் பொக்ரானில் பிரமாண்டமாக படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துணைநடிகர்கள் பங்கேற்றதாகவும் இந்தப் படப்பிடிப்பு மார்ச்.20 வரை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.