2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் சிலர் நடித்து விமரசனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் வட சென்னை. லைகா, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்றது.
தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தினை இயக்கி முடித்துள்ளார். பின்னர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படமெடுக்க உள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ‘பதான் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு?’- ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் சுவாரசிய பதில்!
'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் வட சென்னை 2 பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தனுஷ், “இதற்கு வெற்றிமாறன் சார் ஆபிசில்தான் கேட்க வேண்டும். ஆனால் நிச்சயமாக வட சென்னை2 நடக்கும். விரைவில் எதிர்பார்க்கலாம்” என பதிலளித்துள்ளார்.