'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு, “நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது. இருந்தாலும் உரிமையுடன் சொல்கிறேன். எனது காரை பின் தொடர்ந்து வராதீர்கள். உங்களை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்போதும் இதை ஊக்குவிக்கமாட்டேன். உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. அதை பார்த்துக்கொள்ள நீங்கள் வேண்டும். தயவு செய்து இதை பின்பற்றுங்கள்” என செல்லமாக அறிவுரை வழங்கினார்.
‘வட சென்னை 2 எப்போது?’- தனுஷ் பதில்!
இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!
‘பதான் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு?’- ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் சுவாரசிய பதில்!
லோகேஷ் கனகராஜ் படங்களில் ஆங்கிலப் பாடல்களை எழுதும் ஹெஸ்சன்பர்க் யார்?
‘ஏகே 62’ படத்திலிருந்து விலகியதை சூசகமாக உணர்த்திய விக்னேஷ் சிவன்!