நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: பிரம்மாண்ட வெற்றி... விரைவில் ‘பதான் 2’?
இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாத முதல் வாரத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்.