செய்திகள்

நம்ம வந்தியத்தேவன் பாடிய பாடல் - ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

DIN

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் அதிகம் பேரால் விரும்பப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் வந்தியத்தேவன். பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க முடிவுசெய்யப்பட்ட போது எம்ஜிஆர் துவங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரும் ஏற்க விரும்பிய வேடம் வந்தியத்தேவன் கதாப்பாத்திரமே. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

காதல், வீரம், நட்பு, நகைச்சுவை என பல பரிமாணங்கள் கொண்ட கதாப்பாத்திரத்தை நடிகர் கார்த்தி மிக சிறப்பாக கையாண்டார். பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் சர்தார் படத்தின் மீதான எதிர்பாப்ப்பு இப்பொழுதே அதிகரித்துள்ளது. 

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிததுள்ளனர். சர்தார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, ஏறு மயிலேறி என்ற பாடலை பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT