செய்திகள்

ஜீ தமிழ் 'செம்பருத்தி'க்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் கார்த்திக் ராஜ்!

DIN

''செம்பருத்தி'' தொடர் மூலம் பிரமபலமான நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சின்னத் திரை தொடரில் நடிக்கவுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி கதாபாத்திரம் மூலம் நடித்தவர் கார்த்திக் ராஜ். 'செம்பருத்தி' என்ற கிராமத்தும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களை வென்றவர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரின்போது பல பெண் ரசிகர்களைக் கொண்ட நடிகர் கார்த்திக் ராஜ், 'செம்பருத்தி' தொடரில் பல குடும்பத் தலைவிகளின் ஆதரவையும் பெற்றவரானார். 

எனினும், 'செம்பருத்தி' தொடரில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அவருக்கு பதில் நடிகர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். 

கார்த்திக் ராஜ் நடித்த 'பிளாக் அண்ட் வொயிட்' திரைப்படம் நேரடியாக ஜீ தமிழில் பிரீமியர் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஜீ தமிழில் நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார். 

பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி தமிழில் 'கார்த்திகை தீபம்' என்ற பெயரில் புதிய தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தொடரின் நாயகனாக கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா நடிக்கவுள்ளார். இவர் 'பிளாக் அண்ட் வொயிட்' படத்தில் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், கார்த்திக் ராஜின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT