செய்திகள்

''20 ஆண்டுகளுக்கு பிறகு...'' - நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி பதிவு

DIN

20 ஆண்டுகளுக்கு பிறகு மாதவனுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் நடிகர் மாதவன் திரைப்படம் ஒன்றை நடித்து இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி மற்றும் மாதவன், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் திரு மற்றும் இந்திரா ஆகிய கதாப்பாத்திரங்களை செய்தது முதல், ராக்கெட்ரி படத்தில் திரு மற்றும் திருமதி நம்பி நாராயணனாக நடித்தது வரை எதுவும் மாறவில்லை. 

மேடி, 20 ஆண்டுகளுக்கு பிறகு உன் இயக்கத்தில் உன்னுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீ சிறப்பானவன் என்று குறப்பிட்டு, மாதவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT