பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்து அப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
இதையும் படிக்க: ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘பொன்னியின் செல்வன்’
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாடலை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளனர். இப்பாடல் வெள்ளிக்கிழமை (ஆக.19) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘சோழா..சோழா’ என்கிற இப்பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.