செய்திகள்

ஆலியாவை அப்படியே தூக்கிச் சென்ற ரன்பீர் (விடியோ)

DIN


நடிகர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஆகியோர் திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நடிகர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது. கரீனா கபூர், கரண் ஜோஹர், ஸோயா அக்தர், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்தபிறகு, இருவரும் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆலியா பட்டை ரன்பீர் கபூர் அப்படியே தூக்கிச் சென்றார். இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, திருணம் குறித்து மற்றும் திருண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஆலியா பட்.

ஆலியா பதிவு:    

 "வீட்டில் இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செலவழித்த எங்களுக்குப் பிடித்த இடமான பால்கனியில் திருமணம் செய்துகொண்டோம். ஏற்கெனவே ஏராளமான நினைவுகள் உள்ள நிலையில், இருவரும் இணைந்து மேற்கொண்டு நினைவுகளைக் கட்டமைக்கவுள்ளோம். அன்பு, சிரிப்பு, அமைதி, சினிமா இரவுகள், குட்டிச் சண்டைகள் உள்ளிட்டவை நினைவுகளில் நிறைந்துள்ளன.

இந்த முக்கியமானத் தருணத்தில் உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. இந்தத் தருணத்தை அது மேலும் சிறப்பாக்கியது.

அன்புடன் ரன்பீர் மற்றும் ஆலியா."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT