ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி பெரும் நம் நாட்டின் கல்வி அமைப்பு குறித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் '3 இடியட்ஸ்'. இந்தப் படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரைக் கொண்டு இயக்குநர் ஷங்கர் மறு உருவாக்கம் செய்தார். தமிழிலும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில் நண்பன் படத்தில் விஜய் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் சூர்யா, மகேஷ் பாபு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்த நிலையில் இறுதியாக விஜய்யே அந்த வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தில் விஜய் நன்றாக நடித்திருந்ததாக பாராட்டுகள் குவிந்தன.
இதையும் படிக்க | சர்வைவர் நிகழ்ச்சியில் விபத்து: காப்பாற்ற ஓடிய அர்ஜூன்
இந்த நிலையில் மகேஷ் பாபு ஏன் நண்பன் படத்தில் நடிக்கவில்லை என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தூக்குடு பட இயக்குநர் ஸ்ரீனு வைட்லா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மகேஷ் பாபு அளித்த விருந்து ஒன்றில் கலந்துகொண்டேன். அப்போது மகேஷ் பாபுவிடம், தூக்குடு படத்தின் சில காட்சிகளையும், வசனங்களையும் தெரிவித்தேன்.
உடனடியாக அவரது மனைவியை அழைத்த மகேஷ் பாபு, நான் நண்பன் படத்தில் நடிக்கப்போவதில்லை என்றும், என் படத்தில் நடிக்கப்போவதாகவும் கூறினார் என்றார். தூக்குடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படம் வெளியாகி கடந்த வாரத்துடன் 10 வருடங்களை நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.