செய்திகள்

''விஜய் பயந்து விட்டார், அவர் மத்திய அரசை விமரிசிக்காததற்கு காரணம்...'' - பிரபல தயாரிப்பாளர் அதிரடி

DIN

விஜய் பயந்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ருத்ரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால், அந்தப் படத்துக்கு சென்சாரில் பிரச்னை வருவது இயல்பான ஒன்று தான். 

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமரிசனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். 

அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜய்யை என்ன செய்தார்களோ, அந்தப் படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமரிசனமே செய்வதில்லை. விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீஸ்வரர். பணம் அதிகம் சேர்ந்தவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT