விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம் குறித்து இயக்குநர் நவீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் இன்று (வெள்ளிகிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். என்.எஸ்.உதயகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம் ஸ்லம் ஆந்தம் என்ற பாடலை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரேம்ஜி, விஜய் ஆண்டனி, நிவாஸ் கே. பிரசன்னா இணைந்து பாடியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'ஒரே முக பாவனைகளை வைத்துக்கொண்டு ஒரு கதாநாயகன் இரண்டு மணி நேரம் நம்மை மகிழ்விக்கிறார். அம்மா சென்டிமென்ட் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி இணைந்தால் வெற்றி தான் மீண்டுமொருமுறை கோடியில் ஒருவன் நிரூபித்திருக்கிறது. மாஸ் காட்சியில் கூட நகைச்சுவை அழகாக வேலை செய்கிறது. திரையரங்குகளில் பார்க்கக் கூடிய படம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே எக்ஸ்பிரஷன வச்சிகிட்டு ஒரு ஹீரோ ரெண்டு மணி நேரம் நம்மல போரடிக்காம எண்டர்டெய்ன் பன்றார்