தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். .
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கரோனா நிவாரணமாக, தனது கணவர் விசாகன் நடத்தி வரும் அபெக்ஸ் பார்மசி நிறுவனம் சார்பாக ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.